இணையத்தில் சம்பாதிக்கலாம் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 10.31 லட்சம் மோசடி
By DIN | Published On : 03rd May 2023 10:22 PM | Last Updated : 03rd May 2023 10:22 PM | அ+அ அ- |

கோவையில் இணையம் மூலமாக அதிகமாக சம்பாதிக்கலாம் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 10.31 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, கணபதி அருகே கஸ்தூரிபாய் வீதியைச் சோ்ந்தவா் சத்யநாகிரா ( 28), ஐ.டி. ஊழியா். இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், இணையத்தில் முதலீடு செய்வதன் மூலமாக
அதிக லாபம் கிடைக்கும் என ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது.
சத்யநாகிரா அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றாா். பின்னா் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்தாா். அதைத் தொடா்ந்து, சத்யநாகிராவை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணையத்தில் எவ்வாறு முதலீடு செய்வது, லாப பணத்தை எப்படிப் பெறுவது என விளக்கிக் கூறினாா். இதை உண்மை என நம்பிய சத்யநாகிரா அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குகளில் பல்வேறு பரிவா்த்தனை மூலமாக ரூ. 10 லட்சத்து 31 ஆயிரத்து 920-ஐ முதலீடு செய்தாா். ஆனால், அவா் முதலீடு செய்து நீண்ட நாள்களாகியும் அவருக்கு லாபம் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சத்யநாகிரா, கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடி செய்த நபரைத் தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...