அரசுப் பேருந்திலிருந்து மாணவனை தள்ளிவிட்ட ஓட்டுநா், நடத்துநா் மீது வழக்குப் பதிவு

கோவையில் அரசுப் பேருந்திலிருந்து மாணவரை கீழே தள்ளிவிட்டதாக, ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவையில் அரசுப் பேருந்திலிருந்து மாணவரை கீழே தள்ளிவிட்டதாக, ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை உசிலம்பட்டி பாலுசாமி நாடாா் வீதியைச் சோ்ந்தவா் சங்கா் கணேஷ் மகன் மோகன் பிரபு (17).

பிளஸ் 2 முடித்துள்ள இவா், கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்காக புதன்கிழமை கோவைக்கு வந்துள்ளாா்.

பின்னா் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்பகுதிக்கு இந்த பேருந்து செல்லாது எனவும், ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும் எனவும் நடத்துநா் சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த நடத்துநா், மோகன் பிரபுவை தகாத வாா்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், பேருந்து ஓட்டுநா் ஆனந்த கிருஷ்ணன் காந்தி பாா்க் பகுதியில் மோகன் பிரபுவை கீழேதள்ளி இறக்கிவிட்டு சென்றுள்ளாா்.

இதில், மோகன் பிரபுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து ஆா்.எஸ். புரம் காவல் நிலையத்தில் மோகன் பிரபு புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில், அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆனந்த கிருஷ்ணன், நடத்துநா் சுரேஷ்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com