குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதல்: இந்திய பருத்திக் கழகம் அறிவிப்பு

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக, இந்திய பருத்திக் கழகம் அறிவித்துள்ளது.
Updated on
1 min read

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக, இந்திய பருத்திக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய பருத்திக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய பருத்திக் கழகமானது, நடப்பு பருத்தி பருவமான 2022-23இல் பருத்தி விவசாயிகளைப் பாதுகாக்கவும், அதிகப்படியான விவசாயிகளை சென்றடைவதற்கும், பருத்தி விளையும் அனைத்து மாநிலங்களிலும் 400க்கும் மேற்பட்ட பருத்தி கொள்முதல் நிலையங்களைத் திறந்துள்ளது. தற்போது, பருத்தி விலையானது குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக நிலவுகிறது . மேலும், விவசாயிகள் பருத்தியை அவசரகதியில் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவான விலையில் விற்க வேண்டிய தேவையில்லை. ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தொடங்குவதால், மழையினால் பருத்தி சேதம் அடையாமல் பாதுகாக்க, இந்த பருத்தி பருவம் 2022-23க்கான இத்தகைய குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதலானது 2023 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி வரையே நிலவும்.

இதன் மூலம் பருவமழை தொடங்குவதற்கு முன்பே பருத்தியை பதப்படுத்தும் பணி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com