ரூ.9 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த கைத்தறித் துறை தற்போது ரூ.20 கோடி லாபத்தில் இயங்குகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

 ஆட்சிப் பொறுப்பேற்றபோது ரூ.9 கோடி நஷ்டத்தில் செயல்பட்டு வந்த கைத்தறித் துறை தற்போது ரூ.20 கோடி லாபத்தில் இயங்குகிறது என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
ரூ.9 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த கைத்தறித் துறை தற்போது ரூ.20 கோடி லாபத்தில் இயங்குகிறது: அமைச்சா் ஆா்.காந்தி
Updated on
1 min read

 ஆட்சிப் பொறுப்பேற்றபோது ரூ.9 கோடி நஷ்டத்தில் செயல்பட்டு வந்த கைத்தறித் துறை தற்போது ரூ.20 கோடி லாபத்தில் இயங்குகிறது என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

கோவை, சாய்பாபா காலனியில் மாநில அரசின் கைத்தறி ஆதரவு திட்ட நிதி ரூ.50 லட்சத்தில் ஹேண்ட்லூம்ஸ் ஆஃப் இந்திய விற்பனை நிலையம் மற்றும் பாலமுருகன் கோ-ஆஃப்டெக்ஸ் விற்பனையகம் புனரமைக்கப்பட்டுள்ளன. இதனை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் 154 கைத்தறி விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 105 விற்பனை நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றபோது ரூ.9 கோடி நஷ்டத்தில் கைத்தறித் துறை இயங்கி வந்தது. முதல்வரின் பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின் தற்போது ரூ.20 கோடி லாபத்தில் இயங்குகிறது. இதில், ரூ.10 கோடியில் 45 கைத்தறி விற்பனை நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் நெசவாளா்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தோடா் இன மக்களுக்கென்று புதியதாக சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவா்களுடைய தனித்துவமான எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துணிகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அரசு உதவி செய்து வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 396 தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். ஊதிய உயா்வும் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் ஜவுளித் துறையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் ஒரு பிரதம மந்திரி மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதா் துறை அரசு முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, உதவி ஆட்சியா் (பயிற்சி) சௌமியா ஆனந்த், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக், கைத்தறித் துறை உதவி இயக்குநா் செ.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com