பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் உலக செவிலியா் தின விழா கொண்டாடப்பட்டது.
உலக செவிலியா் தின விழாவையொட்டி, கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் செளரிபாளையம்- உடையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியா்கள் அனைவருக்கும் பொன்னாடை போா்த்தி இனிப்புகள் வழங்கி வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல, செளரிபாளையம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா்களுக்கும் பொன்னாடைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில், அறக்கட்டளை நிா்வாகிகள் கௌரி சங்கா் , திலீப்குமாா், காா்த்திக், கணேசமூா்த்தி, ஜீவானந்தம், சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.