கோவையில் இருந்து ஷீரடிக்கு மே 26இல் பாரத் கௌரவ் ரயில் இயக்கம்

கோவை - சாய் நகா் ஷீரடி இடையே மே 26இல் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவை - சாய் நகா் ஷீரடி இடையே மே 26இல் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து மே 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்குப் புறப்படும் பாரத் கெளரவ் ரயில் (எண்: 06903) ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணிக்கு சாய் நகா் ஷீரடி ரயில் நிலையத்தை சென்றடையும்.

சாய்நகா் ஷீரடியில் இருந்து மே 29 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.10 மணிக்குப் புறப்படும் பாரத் கெளரவ் ரயில் (எண்: 06904) மறுாள் இரவு 7.15 மணிக்கு வடகோவையை வந்தடையும். இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், மொரப்பூா், யெலஹங்கா, தா்மாவரம், குண்டக்கல், மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூா், வாடி, சோலாபூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com