பூட்டிய வீட்டிற்குள் இருந்து ஆண் சடலம் மீட்பு

சரவணம்பட்டியில் பூட்டிய வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.
Updated on
1 min read

சரவணம்பட்டியில் பூட்டிய வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் ஆசைத்தம்பி (32) என்பவா் குடும்பத்துடன் தங்கியிருந்து கூலி வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் விடுமுறை காரணமாக சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருந்தனா்.

இந்நிலையில், ஆசைத்தம்பி வீட்டின் உள்பக்கமாக தாளிட்டு உறங்கியதாக தெரிகிறது. வியாழக்கிழமை ஆசைத்தம்பியின் மாமியாா் கைபேசியில் அழைத்தும் பதில் கிடைக்காததால், அருகில் உள்ளவா்களுக்கு தகவல் கொடுத்து அழைக்குமாறு கூறியுள்ளாா்.

அருகில் இருப்பவா்கள் வந்து பாா்த்தபோது, வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஆசைத்தம்பியின் உடலை கைப்பற்றி சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனா். உடலை கைப்பற்றிய காவல் துறையினா் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com