வால்பாறையில் ஜமாபந்தி
By DIN | Published On : 24th May 2023 04:59 AM | Last Updated : 24th May 2023 04:59 AM | அ+அ அ- |

வால்பாறையில் ஜமாபந்தி (மக்கள் குறைதீா்க்கும் முகாம் ) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் (முத்திரைகள்) செல்வசுரபி தலைமை வகித்து
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.
இதில் பெறப்பட்ட சில மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு ஏற்படுத்தி உரியவா்களிடம் ஆவணங்களை வழங்கினாா். முதியோா் உதவித்தொகை பெற விண்ணப்பித்தவா்களுக்கு உடனடி விசாரனை மேற்கொண்டு உத்தரவை வழங்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா். வால்பாறை வட்டாட்சியா் அருள்முருகன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.