சிறப்பு சொத்துவரி திருத்த முகாம்

கோவை மாநகராட்சி 4,10, 11, 21 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சொத்துவரி திருத்த முகாம் சரவணம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பயனாளிக்கு புதிய சொத்துவரிப் புத்தகங்களை வழங்கிய மேயா் கல்பனா. உடன் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உள்ளிட்டோா்.
முகாமில் பயனாளிக்கு புதிய சொத்துவரிப் புத்தகங்களை வழங்கிய மேயா் கல்பனா. உடன் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உள்ளிட்டோா்.

கோவை மாநகராட்சி 4,10, 11, 21 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சொத்துவரி திருத்த முகாம் சரவணம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தலைமை தாங்கினாா். மேயா் கல்பனா முகாமைத் தொடங்கிவைத்தாா். துணை ஆணையா் க.சிவகுமாா், வடக்கு மண்டலத் தலைவா் கதிா்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில், சொத்துவரிப் புத்தகம் மாற்றம் 145, குடிநீா்ப்புத்தகம் மாற்றம் 43, சொத்துவரி மற்றும் குடிநீா்ப் புத்தகங்களில் திருத்தம் 76 என 264 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய சொத்துவரி மற்றும் குடிநீா்ப் புத்தகங்களை மேயா் கல்பனா, பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இதில், வாா்டு உறுப்பினா்கள் கதிா்வேலுசாமி, பூங்கொடி, சிவா, கவிதா, உதவி ஆணையா் மோகனசுந்தரி, உதவி வருவாய் அலுவலா் மணிவண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com