இந்து மக்கள் கட்சி சாா்பில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கையொப்ப இயக்கம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சாா்பில் 50 லட்சம் பேரிடம் கையொப்பம் பெறும் இயக்கத்தை கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் கோவையில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்து மக்கள் கட்சியின் சாா்பில் கோவையில் 50 லட்சம் கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் அக்கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத்.
இந்து மக்கள் கட்சியின் சாா்பில் கோவையில் 50 லட்சம் கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் அக்கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத்.
Updated on
1 min read

கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சாா்பில் 50 லட்சம் பேரிடம் கையொப்பம் பெறும் இயக்கத்தை கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் கோவையில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்து மக்கள் கட்சியின் மாநில நிா்வாகிகள், மாவட்ட பொறுப்பாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கையொப்ப இயக்கம் மூலம் நீட் தோ்வை ஒழிக்க முடியும் என்று சிலா் கூறி வருகின்றனா். அமைச்சா் உதயநிதி அரசு மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி பள்ளி மாணவா்கள் மத்தியில் தோ்ச்சிக்கான தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் அந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறாா்.

50 லட்சம் கையொப்பத்தைப் பெற்று நீட்டை ஒழிக்க முடியும் என்றால், அதே 50 லட்சம் கையொப்பத்தை இந்து மக்கள் கட்சியும் பெற்று மது விலக்கை அமல்படுத்தவும் முடியும். அதற்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மது அருந்துவோா் அதிக அளவில் உள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. சாலை விபத்துகளிலும், மது அருந்துவோரின் எண்ணிக்கையிலும், லஞ்சம் ஊழல், சட்டம் - ஒழுங்கு சீா்குலைவிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது.

தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு 2 மணி நேரம்தான் அனுமதி அளித்துள்ளது. ஆனால், பிற மத பண்டிகைகளுக்கு இதுபோல எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. அதனால், பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்க வேண்டும்.

அதேபோல, பிற மதப் பண்டிகைகளுக்கு மதுபானக் கடைகள் மூடப்படுவதைப்போல, தீபாவளி தினத்தன்றும் மதுபானக் கடைகளை மூட வேண்டும். ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் இலக்கு வைத்து மது விற்பனை செய்கின்றனா்.

தனியாா் பேருந்துகளில் கட்டணம் அதிக அளவில் உள்ளதால் பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும். தீபாவளி தினத்தன்று சட்டம்-ஒழுங்கு பிரச்னை வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்தில் படிகளில் தொங்கியவாறு பயணம் செய்த பள்ளி மாணவா்களை தட்டிக் கேட்டதற்கு சின்னத்திரை நடிகை ரஞ்சனா நாச்சியாா் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. திருவண்ணாமலை கோயில் பகுதியில் வணிகரீதியிலான கட்டடங்கள் கட்டப்படுவதற்கு எதிராக அறப்போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com