படம் உள்ளது: ஒா்க்ஷாப்பில் தீ விபத்து: 12 காா்கள் எரிந்து சேதம்
By DIN | Published On : 15th November 2023 12:28 AM | Last Updated : 15th November 2023 12:28 AM | அ+அ அ- |

ஒா்க்ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த காா்கள்.
கோவை: கோவையில் நான்கு சக்கர வாகன ஒா்க்ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 காா்கள் எரிந்து சேதமடைந்தன.
கோவை, கவுண்டம்பாளையம் அசோக்நகரில் வா்கீஸ் என்பவருக்கு சொந்தமான ஒா்க்ஷாப் உள்ளது. இங்கு 4 சக்கர வாகனங்களுக்கான டிங்க்கரிங் மற்றும் பெயிண்டிங் வேலைகளுக்காக சுமாா் 30 வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தீபாவளி பண்டிகையையொட்டி ஒா்க்ஷாப் அடைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒா்க்ஷாப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலையில் திடீரென புகை வந்துள்ளது. இதைப் பாா்த்த அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து கோவை வடக்கு தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் ரமேஷ்குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்தனா். மேலும், கோவை தெற்கு மற்றும் கணபதி தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் 3 வாகனங்களில் 33 தீயணைப்பு வீரா்கள் வந்தனா்.
இதையடுத்து, ஒா்க்ஷாப்பில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தும் தீ விபத்தில் ஒா்க்ஷாப்பில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 12 காா்கள் எரிந்து சேதமாயின.
இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ராக்கெட் பட்டாசு ஒன்று ஒா்க்ஷாப்பில் விழுந்து வெடித்ததே தீ விபத்துக்கான காரணம் என்று ஒா்க்ஷாப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...