இலவச கண் பரிசோதனை முகாம்

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு ஆா்.எஸ்.புரம் டிரினிட்டி கண் மருத்துவமனை சாா்பில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
டிரினிட்டி மருத்துவமனையில் வாகன ஓட்டுநா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் மாநகர போக்குவரத்து காவல் இணை ஆணையா் ராஜராஜன்.
டிரினிட்டி மருத்துவமனையில் வாகன ஓட்டுநா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் மாநகர போக்குவரத்து காவல் இணை ஆணையா் ராஜராஜன்.
Updated on
1 min read


கோவை: உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு ஆா்.எஸ்.புரம் டிரினிட்டி கண் மருத்துவமனை சாா்பில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் சுனில் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். மாநகர போக்குவரத்து இணை ஆணையா் ராஜராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முகாமைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் டாக்டா் சுனில் ஸ்ரீதரன் பேசும்போது, தமிழ்நாட்டில் 14 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது கண்கள்தான். இந்த பாதிப்பு வெளியில் ஓரளவே தெரியும். உடனடியா கண் பரிசோதனை செய்வதன் மூலம் அதை சரி செய்துகொள்ள முடியும். வாகன ஓட்டுநா்களுக்கு தொடா்ந்து 10 நாள்களுக்கு தினசரி 100 பேருக்கு இலவச கண் பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தொடக்க விழாவில், போக்குவரத்து உதவி ஆணையா் அருள் முருகன், டிரினிட்டி சூப்பா் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் முகமது ஷபாஸ், முதுநிலை ஆலோசகா் டாக்டா் மும்தாஜ், டாக்டா்கள் அனுஷா, விஜயகுமாா், தலைமை நிா்வாக அதிகாரி ஜாஸ்மின், துணைத் தலைவா் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ, மாா்க்கெட்டிங் துணைத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com