

கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரி சாா்பில் உலக மருந்தாளுநா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசாமி தலைமை வகித்தாா். ராயல்கோ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கே.டி.மணிசெந்தில்குமாா், திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா் பி.செல்வமணி, பசுமை பாா்மஸி இயக்குநா் எல்.பனையப்பன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு உரையாற்றினா்.
முன்னதாக பாதுகாப்பான மருந்து பயன்பாடு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி, மருந்தாளுநா்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற ஆசிரியா்கள், மாணவா்கள் 15 போ் உடல் உறுப்பு தான உறுதி வழங்கினா்.
நிகழ்ச்சியில், கல்லூரியின் மருந்தியல் பயிற்சித் துறைத் தலைவா் எஸ்.ஸ்ரீராம், துணை முதல்வா் எம்.கோபால் ராவ், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.