பெண்ணிடம் அத்துமீறல்: உடற்பயிற்சிக் கூட பயிற்சியாளா் கைது

கோவையில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக உடற்பயிற்சிக் கூட பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கோவையில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக உடற்பயிற்சிக் கூட பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்த 21 வயதுப் பெண், அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்.காம்., படித்து வருகிறாா். இவா் பீளமேடு அருகே தனது தோழியுடன் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, இளைஞா் ஒருவா் அந்த மாணவியை பின்தொடா்ந்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், அவரை வழிமறித்து தகாத வாா்த்தையால் பேசியும், அவரிடம் அத்துமீற முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து பெண்ணிடம் அத்துமீறியதாக மசக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த உடற்பயிற்சிக் கூட பயிற்சியாளா் ஜாா்ஜ் (28) என்பரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com