கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கொச்சுவேலியில் இருந்து அக்டோபா் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மாலை 6.05 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி - பெங்களூா் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06083) மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூா் சென்றடையும்.
பெங்களூரில் இருந்து அக்டோபா் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் பெங்களூா்- கொச்சுவேலி சிறப்பு விரைவு ரயில் (06084) மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூா், திருவல்லா, சங்கனச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு , போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.