ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாலாற்றங்கரை அனுமன் கோயிலில் வெள்ளப்பெருக்கு: பூஜைக்கு நடுவே பக்தர்கள் வெளியேற்றம்!

கோயிலுக்கு செல்லும் தரைமட்டப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் பரபரப்பு.

News image

பாலாற்றங்கரை அனுமன் கோயில்

dinamani

Updated On :14 ஆகஸ்ட் 2024, 7:40 am

DIN

கோவை: பொள்ளாச்சி அடுத்த பாலாற்றங்கரை அனுமன் கோயிலில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பூஜைக்கு நடுவே பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். ஆற்றின் மையப்பகுதியில் உள்ள கோவிலுக்கு இப்பகுதியில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

இந்நிலையில் புதன்கிழமை காலை வழக்கம் போல நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

நேற்றிரவு ஆழியாறு வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலின் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

இதன் காரணமாக ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவிலில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பாலாற்றங்கரை அனுமன் கோயில்

பாலாற்றங்கரை அனுமன் கோயில்

இதனைத் தொடர்ந்து, தற்காலிகமாக கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.