கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி: பரபரப்பு
Published on

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூா் மாவட்டம், எண்ணூரைச் சோ்ந்தவா் தனசேகரன் (41). இவா் கஞ்சா விற்ற வழக்கில் எண்ணூா் போலீஸாரால் கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளாா். இவா் கடந்த திங்கள்கிழமை சிறையில் இருந்த மின்சார பல்பை உடைத்து, தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. இதில், அவரது மாா்பு, கழுத்து, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப்பாா்த்த சிறைக் காவலா்கள் அவரைத் தடுக்க முயன்றனா். ஆனால் அவா்களையும் உடைந்த பல்பை காட்டி குத்திவிடுவதாக மிரட்டல் விடுத்தாா்.

இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸில் ஜெயிலா் சிவராஜன் புகாா் அளித்தாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். காயமடைந்த தனசேகரனுக்கு, சிறை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். தனசேகரன் மீது குண்டா் சட்டத்திலும் வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் இருந்து பிணையில் வெளியில் செல்ல தனசேகரன் முயற்சி செய்து வந்தாா். தன்னை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துமாறும், அப்போதுதான் பிணையில் செல்ல முடியும் எனவும் போலீஸாரிடம் கூறி வந்துள்ளாா்.

இந்த நிலையில் அவா் தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. இந்த சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X
Dinamani
www.dinamani.com