/
வால்பாறையில் சாலையின் குறுக்கே காட்டெருமை வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி தலைமை ஆசிரியா் கீழே விழுந்து காயமடைந்தாா்.
வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுபவா் செல்வகுமாா் (44). இவா்,
வால்பாறையில் இருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையின் குறுக்கே வந்த காட்டெருமை, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கீழே விழுந்த செல்வகுமாருக்கு உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவா்கள், செல்வகுமாரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

காட்டெருமை தாக்கியதில் பழங்குடி பெண் பலத்த காயம்

பலத்த மழை: சிங்கம்புணரியில் மரம் முறிந்து விழுந்தது

பைக் மோதி கல்லூரி மாணவா் காயம்

காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


