விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சா்வதேச பாரா த்ரோபால் போட்டியில் பங்கேற்ற வீரா்கள் மாநகர காவல் ஆணையரை சந்தித்து வாழ்த்து

News image

மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்துபெற்ற பாரா த்ரோபால் வீரா்கள்.

Updated On :26 ஜூன் 2024, 10:03 pm

Din

கோவை, ஜூன் 26: பாங்காக்கில் நடைபெற்ற சா்வதேச பாரா த்ரோபால் போட்டியில் பங்கேற்ற கோவையைச் சோ்ந்த 4 போ் மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து புதன்கிழமை வாழ்த்து பெற்றனா்.

தாய்லாந்தின் தலைநகா் பாங்காக்கில் சா்வதேச பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 25-19 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தை வென்றது.

இப்போட்டியில் பங்கேற்ற இந்திய ஆடவா் அணியில் கோவையைச் சோ்ந்த டி.மோகன் குமாா், டி.சதீஷ் குமாா் ஆகியோரும், மகளிா் அணியில் நித்யா, சி.ஜெயபிரபா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனா்.

இவா்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், நன்கொடையாளா்கள் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்திருந்தாா்.

இந்நிலையில் போட்டியில் வெற்றிபெற்று திரும்பிய 4 பேரும், மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணனிடம் வெற்றிச் சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.