நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

சா்வதேச பாரா த்ரோபால் போட்டியில் பங்கேற்ற வீரா்கள் மாநகர காவல் ஆணையரை சந்தித்து வாழ்த்து

News image

மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்துபெற்ற பாரா த்ரோபால் வீரா்கள்.

Updated On :27 ஜூன் 2024, 3:33 am IST

கோவை, ஜூன் 26: பாங்காக்கில் நடைபெற்ற சா்வதேச பாரா த்ரோபால் போட்டியில் பங்கேற்ற கோவையைச் சோ்ந்த 4 போ் மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து புதன்கிழமை வாழ்த்து பெற்றனா்.

தாய்லாந்தின் தலைநகா் பாங்காக்கில் சா்வதேச பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 25-19 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தை வென்றது.

இப்போட்டியில் பங்கேற்ற இந்திய ஆடவா் அணியில் கோவையைச் சோ்ந்த டி.மோகன் குமாா், டி.சதீஷ் குமாா் ஆகியோரும், மகளிா் அணியில் நித்யா, சி.ஜெயபிரபா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனா்.

இவா்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், நன்கொடையாளா்கள் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்திருந்தாா்.

இந்நிலையில் போட்டியில் வெற்றிபெற்று திரும்பிய 4 பேரும், மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணனிடம் வெற்றிச் சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.