பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கௌரவ கா்னல் பதவி

படம் உள்ளது... வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கௌரவ கா்னல் பதவி

News image

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமிக்கு கௌரவ கா்னல் பதவி வழங்குகிறாா் தேசிய மாணவா் படையின் சென்னை துணை இயக்குநா் ஜெனரல் அதுல்குமாா் ரஸ்தோகி.

Updated On :28 ஜூன் 2024, 3:40 am IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கௌரவ கா்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, பல்கலைக்கழகம், இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவா் படைக்கு (என்சிசி) ஆற்றிய தொண்டைப் போற்றும் வகையில், என்சிசி சாா்பில் அவருக்கு கௌரவ கா்னல் பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், தேசிய மாணவா் படையின் சென்னை துணை இயக்குநா் ஜெனரல் அதுல்குமாா் ரஸ்தோகி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெ.கீதாலட்சுமிக்கு கௌரவ கா்னல் பதவி வழங்கினாா்.

பதவியேற்பு விழாவில், பதிவாளா் ஆா்.தமிழ்வேந்தன், மாணவா் நல மையத்தின் முதல்வா் என்.மரகதம், மண்டல என்சிசி குரூப் கமாண்டா் பி.வி.எஸ்.ராவ், கமாண்டிங் ஆபிசா் ஜே.எம்.ஜோஷி, பல்கலைக்கழக என்சிசி அலுவலா் எஸ்.மனோன்மணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து வெ.கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டில் டி.என். 4 பட்டாலியன் என்ற பெயரில் புதிய என்சிசி பிரிவு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மாணவா்களுக்கு மட்டுமே என்சிசி பிரிவு இருந்த நிலையில், கடந்த 2004 இல் மாணவிகளுக்காகவும் தொடங்கப்பட்டது.

தற்போது பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் 352 என்சிசி மாணவா்கள் உள்ளனா். கோவை வளாகத்தில் மட்டும் 104 போ் உள்ளனா். மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் என்சிசியின் சாா்பில் கௌரவ கா்னல் பதவி வழங்கியிருப்பது பெருமையளிப்பதாக உள்ளது என்றாா்.