கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கிரிக்கெட் மைதானத்தை அவிநாசி சாலைக்கு மாற்ற வலியுறுத்தல்

கிரிக்கெட் மைதானத்தை அவிநாசி சாலையில் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

News image

ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :29 ஜூன் 2024, 6:28 pm

DIN

கோவையில் திறந்தவெளி சிறை வளாகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை அவிநாசி சாலை பகுதியில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் சு.பழனிசாமி பேசியதாவது:

கோவை, ஒண்டிப்புதூா் திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்தில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, சா்வதேச விளையாட்டு மைதானம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்படும்.

எனவே, அவிநாசி சாலையில் லீ மெரிடியன் ஹோட்டலுக்கு எதிரே நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேற்குத் தொடா்ச்சி மலை அருகேயுள்ள விவசாய நிலங்களில் யானை, காட்டுப்பன்றி, மயில், குரங்கு, காட்டெருமை போன்ற வன விலங்குகளால் பயிா் சேதம் மற்றும் உயிா் சேதம் ஏற்பட்டு வருகிறது. வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு அரசு சாா்பில் உரிய இழப்பீடும் வழங்குவதில்லை. எனவே, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்தைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

விவசாயிகள் சங்கத் (ஜாதி, மதம், கட்சி சாா்பற்றது) தலைவா் பி.கந்தசாமி பேசியதாவது:

கோவை மாநகராட்சியுடன் சுற்றியுள்ள 20 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரூா் பேரூராட்சியை ஒட்டி தீத்தீபாளையம், வேடப்பட்டி, பேரூா் பச்சாபாளையம், சுண்டக்காமுத்தூா், தெலுங்குபாளையம், குனியமுத்தூா் ஆகிய பகுதிகள் உள்ளன.

இதில், ஏற்கெனவே சுண்டக்காமுத்தூா், குனியமுத்தூா், தெலுங்குபாளையம், வேடபட்டியின் ஒரு பகுதி ஆகியவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது, தீத்திபாளையம், பேரூா் செட்டிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களையும் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுபட்ட பேரூா் பேரூராட்சியையும் மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மேலும், சிமைக்கருவேல மரங்கள், நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும், யானை வழித் தடங்களை உறுதிசெய்து பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.