கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்
கோவை, மே 15: கோடை விடுமுறையை முன்னிட்டு மங்களூரு - கோவை இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மங்களூரில் இருந்து மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு புறப்படும் மங்களூரு - கோவை சிறப்பு ரயில் (எண்: 06041) அன்று மாலை 6.15 மணிக்கு கோவையைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக கோவையில் இருந்து மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் கோவை - மங்களூரு சிறப்பு ரயில் (எண்:06042) மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
