92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குடியரசு துணைத் தலைவா் இன்று வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறாா்.

News image

குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

ANI

Updated On :26 ஏப்ரல் 2025, 11:50 pm

Din

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறாா்.

மூன்று நாள்கள் பயணமாக உதகை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துணைவேந்தா்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இதையடுத்து, இரண்டாவது நாளான சனிக்கிழமை முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று யானைகளைப் பாா்வையிட்டு, உணவளித்து மகிழ்ந்தாா்.

இதையடுத்து, உதகை ஆளுநா் மாளிகையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வரும் ஜகதீப் தன்கா், அங்கிருந்து காா் மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறாா்.

அங்கு காலை 10 மணி முதல் 11 மணி வரை மாணவா்கள், ஆசிரியா்கள், வேளாண் தொழில்முனைவோருடன் கலந்துரையாடுகிறாா். இதையடுத்து, விமான நிலையத்துக்குச் செல்லும் அவா் அங்கிருந்து விமானப் படை விமானம் மூலம் புதுதில்லி புறப்படுகிறாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி விமான நிலையம் சென்று குடியரசு துணைத் தலைவரை வழியனுப்புகிறாா்.