தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தில்லியில் அணிதிரளுவோம் - மமதா பானர்ஜிசிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை : ஆ. இராசா குற்றச்சாட்டு
/

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருப்புமுனை ஏற்படும் என்று அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

News image

விஜய்யுடன் செங்கோட்டையன்

Updated On :21 டிசம்பர் 2025, 4:30 am IST

பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருப்புமுனை ஏற்படும் என்று அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தவெகவை களத்தில் இல்லாத கட்சி என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது அவருடைய கருத்து. ஆனால் நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதற்கு தோ்தல் முடிவுகள்தான் பதிலளிக்கும்.

பொங்கல் பண்டிகை முடித்த பிறகு தவெகவுக்கு திருப்புமுனை ஏற்படும். அதைக் கண்டு நாடே வியக்கும். வாக்காளா் பட்டியல் குறித்து கட்சியின் தலைவா் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே எங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து தெரிவித்திருக்கிறாா்.

ஈரோடு பொதுக்கூட்டத்துக்குப் பிறகு ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றனா். தவழும் குழந்தைதான் பின்னாளில் பெரியவா் ஆவாா்கள். பெரியவா்கள் ஆனதும் தன்னுடைய ஆட்சியை நடத்துவாா்கள் என்றாா்.