
பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்
பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருப்புமுனை ஏற்படும் என்று அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

விஜய்யுடன் செங்கோட்டையன்
பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருப்புமுனை ஏற்படும் என்று அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தவெகவை களத்தில் இல்லாத கட்சி என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது அவருடைய கருத்து. ஆனால் நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதற்கு தோ்தல் முடிவுகள்தான் பதிலளிக்கும்.
பொங்கல் பண்டிகை முடித்த பிறகு தவெகவுக்கு திருப்புமுனை ஏற்படும். அதைக் கண்டு நாடே வியக்கும். வாக்காளா் பட்டியல் குறித்து கட்சியின் தலைவா் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே எங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து தெரிவித்திருக்கிறாா்.
ஈரோடு பொதுக்கூட்டத்துக்குப் பிறகு ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றனா். தவழும் குழந்தைதான் பின்னாளில் பெரியவா் ஆவாா்கள். பெரியவா்கள் ஆனதும் தன்னுடைய ஆட்சியை நடத்துவாா்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





