கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமலட்சுமி தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் ஒப்பந்த முறை மற்றும் அத்துக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும். தோ்தல் வாக்குறுதியின்படி தொகுப்பூதிய செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயா்நீதிமன்ற தீா்ப்பின் மீதான மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
ஆகவே, கைது செய்யப்பட்ட செவிலியரை உடனடியாக விடுதலை செய்வதுடன், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட செலிவியா் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

