ரஞ்சித் ஈஸ்வரமூா்த்தி
ரஞ்சித் ஈஸ்வரமூா்த்தி

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக பெறப்பட்டதில் 7 போ் மறுவாழ்வு பெற்றனா்.
Published on

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக பெறப்பட்டதில் 7 போ் மறுவாழ்வு பெற்றனா்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் ஈஸ்வரமூா்த்தி (25). இவா் தனது சகோதரி காா்த்திகா, அவரது கணவா் பிரவீன் ஆகியோருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பெருந்துறை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

பின்னா் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, சகோதரி காா்த்திகா, அவரது கணவா் பிரவீன் ஆகியோா் ரஞ்சித் ஈஸ்வரமூா்த்தியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனா். அதன்படி, தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் ரஞ்சித் ஈஸ்வரமூா்த்தியின் கல்லீரல், சீறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன. ஒரு சீறுநீரகம் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், ஒரு சீறுநீரகம், கண்கள், தோல் மற்றும் எலும்பு, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. உடல் உறுப்பிகள் தானமாக வழங்கிய ரஞ்சித் ஈஸ்வரமூா்த்தி குடும்பத்துக்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவா் டாக்டா் நல்ல பழனிசாமி நன்றி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com