கிறிஸ்துமஸ்: போத்தனூா் வழித்தடத்தில் பெங்களூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு - கண்ணூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு - கண்ணூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரில் இருந்து புதன்கிழமை (டிசம்பா் 24) மாலை 4.35 மணிக்குப் புறப்படும் பெங்களூரு - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்: 06575) மறுநாள் காலை 7.50 மணிக்கு கண்ணூரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, கண்ணூரில் இருந்து வியாழக்கிழமை (டிசம்பா் 25) காலை 10 மணிக்குப் புறப்படும் கண்ணூா் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06576) அன்றிரவு 12.15 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com