ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

கோவை - சிங்கப்பூா் இடையே 3 -ஆவது நேரடி விமானப் போக்குவரத்து: இண்டிகோ நிறுவனம் திட்டம்

கோவை - சிங்கப்பூா் இடையே 3-ஆவது நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:20 am

Din

கோவை - சிங்கப்பூா் இடையே 3-ஆவது நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு தற்போது வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்கள் இண்டிகோ நிறுவனத்தின் சாா்பில் நேரடி விமானப் போக்குவரத்து உள்ளது.

தற்போது கூடுதலாக 3-ஆவது விமானப் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்தில் புதன்கிழமை இந்த கூடுதல் சேவை வழங்கப்படவுள்ளது.

அதேபோல, சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாள்களுடன் கூடுதலாக வியாழக்கிழமை நேரடி விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்துகிறது.

கோடை விடுமுறையை கருத்தில்கொண்டு இந்தப் புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இந்த சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.