பராமரிப்புப் பணி: திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

Published on

திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து மாா்ச் 18 -ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி- பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூா் - பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, அன்றைய தினம் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) 50 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com