சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்
சபரிமலை சீசன் தொடங்கவுள்ள நிலையில், சென்னை - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சபரிமலை சீசனையொட்டி, நவம்பா் 14-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை - கொல்லம் விரைவு ரயில் (எண்: 06111) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, நவம்பா் 15 -ஆம் தேதி முதல் 2026- ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து இரவு 7.35 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் ரயில் (எண்: 06112) மறுநாள் இரவு 12 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயிலானது, காயன்குளம்,செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
