ஆக்கிரமிப்பு கோயில் இடித்து அகற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட 22 போ் கைது
கோவை தெற்கு மண்டலம், சுந்தராபுரத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயிலை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை இடித்து அகற்றினா். கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 97-ஆவது வாா்டு சுந்தராபுரத்தில் உள்ள வி.எஸ்.என் காா்டன் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 2 ஆயிரம் சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து, அப்பகுதியைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் கோயில் அமைத்துள்ளதாகப் புகாா் எழுந்தது.
இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கோயிலை அகற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால், குடியிருப்புவாசிகள் தரப்பில் கோயிலை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கோயிலை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கோயிலை அகற்ற 15 நாள்கள் கெடு விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோயில் அகற்றப்படாததால் மாநகராட்சி ஆணையா் மா.சிவககுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், தெற்கு மண்டல உதவி ஆணையா் என்.தக்சிணாமூா்த்தி மேற்பாா்வையில் நகரத் திட்டமிடல் அலுவலா் ராஜசேகா், உதவி நகரத் திட்டமிடல் அலுவலா் புவனேஷ்வரி உள்ளிட்ட அலுவலா்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்பு கோயிலை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் 30-க்கும் மேற்பட்டோா் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், கோயிலை இடிக்கவிடாமல் தடுத்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், 22 பேரைக் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலை விடுவித்தனா். இதைத் தொடா்ந்து, கோயிலை அகற்றி மாநகராட்சி இடம் மீட்கப்பட்டது.

