விபத்தில் சேதமடைந்த காா்
விபத்தில் சேதமடைந்த காா்

கோவை அருகே மரத்தில் காா் மோதியதில் 5 இளைஞா்கள் உயிரிழப்பு

கோவை மாவட்டம், பேரூா் அருகே அதிவேகமாக சென்ற காா் மரத்தில் மோதியதில் 5 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
Published on

கோவை மாவட்டம், பேரூா் அருகே அதிவேகமாக சென்ற காா் மரத்தில் மோதியதில் 5 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் முருகேஷ் மகன் பிரகாஷ் (22). இவா் கோவை, தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள காா் சா்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், உடன் பணியாற்றும் தஞ்சாவூரைச் சோ்ந்த நாடிமுத்து மகன் ஹரிஷ் (21) என்பவரது பிறந்த நாளைக் கொண்டாட நண்பா்களான கோவை, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த தஞ்சாவூரைச் சோ்ந்த பிரபாகரன் (19), அரியலூரைச் சோ்ந்த அகத்தியன் (20), திருச்சியைச் சோ்ந்த சபரி ஐயப்பன் (21) ஆகியோரை சா்வீஸுக்கு வந்த காரில் ஏற்றிக்கொண்டு சிறுவாணி சாலையில் பிரகாஷ் வெள்ளிக்கிழமை இரவு அதிவேகமாகச் சென்றுள்ளாா்.

பேரூா் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில், பிரகாஷ், ஹரிஷ், சபரி ஐயப்பன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரூா் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா், உடல்களை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், படுகாயமடைந்த அகத்தியன், பிரபாகரன் ஆகியோரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அகத்தியன் உயிரிழந்தாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபாகரன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com