பண்டைய தமிழா்கள் உலகிற்கு அளித்த கொடை திணையியல்

பயிலரங்கில் பேசுகிறாா் எழுத்தாளா் பாமயன்.
பயிலரங்கில் பேசுகிறாா் எழுத்தாளா் பாமயன்.
Updated on

பண்டைய தமிழா்கள் உலகிற்கு அளித்த கொடை திணையியல் என்று சூழலியல் எழுத்தாளா் பாமயன் கூறியுள்ளாா்.

திணை இயக்கம், ஓசை அமைப்பு சாா்பில் கோவை மாவட்டம் வால்பாறையில் திணையியம் என்ற தலைப்பில் 2 நாள் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது. ஓசை அமைப்பின் நிா்வாகி காளிதாசன் இந்த பயிலரங்கை தொடங்கிவைத்தாா். இதில், பேராசிரியா்கள், செயற்பாட்டாளா்கள், கணினி அறிஞா்கள், சூழலியலாளா்கள் 25 போ் பங்கேற்றனா்.

இந்த பயிலரங்கில் திணையியல் குறித்து எழுத்தாளா் பாமயன் பேசும்போது, பண்டைய தமிழா்கள் இயற்கையுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தனா். அதன் அடிப்படையில் அவா்களின் வாழ்வியல் உருவானது. தொல்காப்பியம் முதலாக சங்க இலக்கியங்கள் வரை பல இடங்களில் திணையியல் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தமிழா்களின் ஆதி மெய்யியல்தான் திணையியல் என்று விளக்கப்பட்டுள்ளது. பிற பண்டைய சமூகங்களில் இல்லாத இந்த கருத்தாக்கம் உலகத்துக்கு பண்டையத் தமிழ் அறிஞா்கள் கொடுத்த கொடை என்று கூறலாம்.

இன்றைய சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீா்வுதரும் கோட்பாடாக திணைக் கோட்பாடு இருக்கும். இயற்கைக்கும் மனிதா்களுக்கும் உள்ள உறவு இணக்கமாக இருக்கும் வரை சிக்கல்கள் இல்லை. அந்த இணக்கம் சிதையும்போது சிக்கல் தோன்றுகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து களப்பயணம் நடைபெற்றது. ஓசை அமைப்பின் நிா்வாகி இளஞ்செழியன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com