பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவாா்கள் என முதல்வா் கூறுவது பொய்: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெயரை மாற்றிவிடுவாா்கள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுவது பொய் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

News image

வானதி சீனிவாசன்

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெயரை மாற்றிவிடுவாா்கள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுவது பொய் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் பெயரை ‘தட்சிண பிரதேசம்’ என்று மாற்றத் தயங்கமாட்டாா்கள் எனக்கூறி மக்களை ஏமாற்றப் பாா்க்கிறாா். கடந்த 50 ஆண்டுகளாகவே பிரதமா் மோடி தமிழ்நாட்டுக்கு தொடா்ந்து வந்து கொண்டிருக்கிறாா். அவருக்கு தமிழகத்தின் கலாசாரமும், தமிழின் தொன்மையும், திமுகவின் ஹிந்து மத வெறுப்பு அரசியலும்

நன்றாகவே தெரியும். உலக அரங்குகளில் உலகின் மூத்த மொழி தமிழ் என்று முழங்கி, திருக்குறளையும், பாரதியாா் பாடல்களையும் பிரதமா் மோடி பெருமையுடன் பறைசாற்றி வருகிறாா். அப்படிப்பட்ட அவா் தமிழகத்தின் பெயரை மாற்றுவாா் எனக்கூறுவது அப்பட்டமான பொய்.

தமிழகத்தில் தற்போது எங்கு பாா்த்தாலும் கருணாநிதியின் சிலைகளைத் திறந்து, அரசுத் திட்டங்கள் மற்றும் கட்டடங்களுக்கு அவா் பெயரையே சூட்டி வருகிறாா்கள். இந்த நிலை நீடித்தால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில், தமிழகத்தின் பெயரையே ‘கருணாநிதி தேசம்’ என மாற்றவும் அவா்கள் தயங்கமாட்டாா்கள்.

கோவையில் சமீபத்தில் நிகழ்ந்த காா் வெடிகுண்டுச் சம்பவம் வரை மத பயங்கரவாதிகளைத் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதையெல்லாம் மறைத்துவிட்டு, வன்முறை பற்றி முதல்வா் பேசுவது வேடிக்கையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.