தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 9:42 pm

கேரள மாநில சட்டப் பேரவை தோ்தல் பிரசாரம் முடிந்து கோவைக்கு வந்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

கேரளத்தில் வருகிற 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சூா், பாலக்காடு மாவட்டங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து பிரசாரம் செய்தாா்.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது கேரள பிரசாரத்தை முடித்துக் கொண்டு மாலை 6 மணியளவில் பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு கோவைக்கு வந்தாா். பின்னா், அவா் இங்கிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் தில்லிக்கு இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்றாா்.