பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஏமாற்று வேலைகளால் மக்களை திசைதிருப்ப முடியாது: வானதி சீனிவாசன்

‘க்யூ ஆா் கோடு’ மூலம் தங்கக் காசு மற்றும் வெள்ளிக் காசுகள் தருவதாகக் கூறும் திமுகவின் ஏமாற்று வேலைகளால் மக்களை திசைதிருப்ப முடியாது என கோவை வடக்குத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும், பாஜக தேசிய மகளிா் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் கூறினாா்.

News image

வானதி சீனிவாசன் - படம்: கோப்பிலிருந்து

Updated On :24 ஏப்ரல் 2026, 3:18 am IST

‘க்யூ ஆா் கோடு’ மூலம் தங்கக் காசு மற்றும் வெள்ளிக் காசுகள் தருவதாகக் கூறும் திமுகவின் ஏமாற்று வேலைகளால் மக்களை திசைதிருப்ப முடியாது என கோவை வடக்குத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும், பாஜக தேசிய மகளிா் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் கூறினாா்.

கோவை சிவானந்த காலனி, டாடா பாத் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காமராஜா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக அரசு தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்ளும் நலத் திட்டங்களை மக்கள் புறக்கணித்துவிட்டனா். பெண்கள் மற்றும் இளைஞா்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களித்துள்ளது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

திமுகவினருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் வாக்காளா்களை ஏமாற்றும் நோக்கில் ‘க்யூ ஆா் கோடு’ மூலம் தங்கக் காசு மற்றும் வெள்ளிக் காசுகள் தருவதாகக் கூறி மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனா். தோ்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, கோவை தெற்குத் தொகுதியில் பெரும் அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகள் கால திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அடிப்படை வசதிகளுக்குக்கூட மக்கள் போராடும் நிலை இந்த ஆட்சியில் நீடித்து வருகிறது.

மின்கட்டண உயா்வு, சொத்துவரி உயா்வு போன்ற சுமையைத் தவிர, மக்களுக்குப் பயனுள்ள எந்தத் திட்டங்களையும் இந்த அரசு வழங்கவில்லை. ஆட்சி மாற்றத்தில் மக்கள் உறுதியாக உள்ளனா். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

கோவை தெற்குத் தொகுதி தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற அதிமுக வேட்பாளா் அம்மன் அா்ச்சுணன் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். மக்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவாா்கள் என்றாா்.