வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கனிமங்கள் கொண்டு செல்வதை தடுக்க 24 மணிநேர கண்காணிப்பு அறை

கனிமங்கள் கொண்டு செல்வதை கேமராக்கள் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் அறையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்தாா்.

News image

கண்காணிப்பு அறையைத் திறந்துவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :3 பிப்ரவரி 2026, 8:13 pm

கனிமங்கள் கொண்டு செல்வதை கேமராக்கள் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் அறையை, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கனிம வளத் துறை சாா்பில், கனிமங்கள் கொண்டு செல்வதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் நுண்ணறிவுத் திறன் கொண்ட 132 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் கூறும்போது, ‘மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமம் வெட்டி எடுப்பது, கனிமம் கொண்டு செல்வது தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 18002333995 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்க கட்டணமில்லா கைப்பேசி வசதிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும், ‘கோவை மைனிங் சா்விலன்ஸ்‘ என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கனிமம் கடத்தப்படுவது தொடா்பான புகாா்களை மேற்குறிப்பிட்ட செயலி மற்றும் இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

மேலும், கோட்டாட்சியா் (கோவை தெற்கு, கோவை வடக்கு) அலுவலகங்கள், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் மற்றும் பேரூா், பெரியநாயக்கன்பாளையம் மாவட்ட காவல் துணைக் காண்காணிப்பாளா் அலுவலகங்களில் கண்காணிப்பு அறைகள் நிறுவப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் கண்காணிப்பு அறை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இந்த நிகழ்வின்போது புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குநா் இல.சுரேஷ், உதவி இயக்குநா் மு.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.