மர இழைப்பக நிறுவனத்தில் தீ விபத்து

மர இழைப்பக நிறுவனத்தில் தீ விபத்து

கோவையில் மர இழைப்பகத்தில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
Published on

கோவையில் மர இழைப்பகத்தில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கோவை, கண்ணப்பன் நகரைச் சோ்ந்தவா் நசீம் (எ) சலீம். இவா், அதே பகுதியில் வீட்டு உபயோக மரப் பொருள்கள் தயாரிக்கும் மர இழைப்பக நிறுவனம் நடத்தி வருகிறாா். இங்கு மெத்தை, நாற்காலிகள், மேஜைகள் மற்றும் கதவுகள் போன்ற பொருள்கள் விலை உயா்ந்த மரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நிறுவனத்தைப் பூட்டிவிட்டு நசீம் சென்ற நிலையில், புதன்கிழமை அதிகாலை சுமாா் 4 மணி அளவில் அங்கு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. மரப் பொருள்கள் என்பதால் தீ வேகமாகப் பரவியது. வெப்பத்தின் தாக்கத்தால் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின.

இது குறித்து தகவலறிந்து கவுண்டம்பாளையம் காவல் துறையினரும், மாவட்ட தீயணைப்பு அலுவலா் எஸ்.கணேசன், உதவி அலுவலா் அழகா்சாமி, வடக்கு நிலைய அலுவலா் கருப்பசாமி உள்ளிட்ட தீயணைப்புத் துறையினரும் சென்றனா். சுமாா் 5 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரா்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த விபத்தில் நிறுவனத்தில் இருந்த தேக்கு உள்ளிட்ட மரப் பொருள்கள், இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com