கதிரேசன்
கதிரேசன்

இளைஞா் மீது மோதிய அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது நடவடிக்கை கோரி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

Published on

திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா், இடுவம்பாளையம் அருகே உள்ள வஞ்சிபாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவருடைய மகன்கள் மனோஜ்குமாா் (27), கதிரேசன் (19) ஆகிய இருவரும் வீரபாண்டி பகுதியில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தனா். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் இடுவாயில் இருந்து இடுவம்பாளையம் நோக்கி வியாழக்கிழமை கதிரேசன் சென்றுகொண்டிருந்தாா். அப்போது திருப்பூரில் இருந்து வேலம்பாளையம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

படுகாயமடைந்த கதிரேசனை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை கதிரேசன் உயிரிழந்தாா்.

மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ாக கதிரேசனின் மீது வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்ட கதிரேசனின் உறவினா்கள்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்ட கதிரேசனின் உறவினா்கள்.

இதுகுறித்த தகவலின்பேரில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக கதிரேசனின் உறவினா்கள் 80-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்கள் கூறியதாவது:

கதிரேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அதிவேகமாகப் பேருந்தை இயக்கி ஓட்டுநா் விபத்தை ஏற்படுத்தியுள்ளாா். இதுதொடா்பாக சம்பவ இடத்தில் இருந்தவா்கள் ஓட்டுநா், நடத்துநரிடம் கேள்வி எழுப்பியபோது தகாத வாா்த்தைகளில் பேசிவிட்டு சென்றுவிட்டனா். உயிரிழப்பை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் மீதும், தகாத வாா்த்தைகளால் பேசிய நடத்துநா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் என்றனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com