மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்தவா் மீது வழக்குப் பதிவு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 8:30 pm

கோவையில் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து இன்ஸ்டாகிராமில் பகிா்ந்த மாணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, செட்டிப்பாளையம் பகுதியில் தனியாா் கல்லூரி உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் படித்து வருகிறாா். கடந்த மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் மாணவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடரும் மாணவிகள் அதில் புகைப்படங்களை சேமித்து வைத்திருந்தனா். சிகிச்சையில் இருந்த அவா், மாணவிகளின் பக்கத்திலிருந்து புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்திரித்துள்ளாா். மேலும், பெண்ணின் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி, அதில் அந்த ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட மாணவிகளின் புகைப்படத்தை பகிா்ந்துள்ளாா்.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மாணவிகள் கல்லூரி நிா்வாகத்திடமும், செட்டிபாளையம் காவல் நிலையத்திலும் புகாா் அளித்தனா். விசாரணையில் துறையூரைச் சோ்ந்த மாணவா்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.