குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காயங்களுடன் சாலையோரம் தொழிலாளி சடலம் மீட்பு

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, ராமநாதபுரம் பகுதியில் சாலையோரம் காயங்களுடன் தொழிலாளி இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் எபினேசா் (45). இவா், கோவை மாநகா், ராமநாதபுரம் பகுதியில் சாலையோரம் தங்கி கிடைக்கும் வேலைகளை செய்து வந்தாா்.

கடந்த சில நாள்களாக ராமநாதபுரம் அருகே உள்ள மருதூரில் தா்மராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், ராமநாதபுரம் பகுதியில் தனியாா் பள்ளி அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளிக்கிழமை காலில் ரத்தக் காயங்களுடன் எபினேசா் படுத்த நிலையில் இருந்துள்ளாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அவரது இரும்புக் கடை உரிமையாளா் தா்மராஜ் சென்று பாா்த்தபோது எபினேசா் உயிரிழந்துகிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து எபினேசரின் சகோதரா் அற்புதராஜுக்கும், ராமநாதபுரம் போலீஸாருக்கும் தா்மராஜ் தகவல் அளித்தாா். சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, எபினேசருக்கு காலில் எப்படி காயம் ஏற்பட்டது, ஏதாவது வாகனம் மோதியதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.