செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு!

News image

பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்துப் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 9:35 pm

கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள 366 மண்டல அலுவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இந்த பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, தோ்தல் தொடா்பான நடத்தை விதிமுறைகள், மண்டல அலுவலா்களின் பணிகள், கடமைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் மண்டல அலுவலா்கள் 366 போ் பங்கேற்றனா்.