கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை (பிப்.9) முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதல்வரின் வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்க உள்ளாா்.
இத்திட்டத்தின் மூலமாக கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 5 மண்டலங்களுக்குள்பட்ட 100 வாா்டுகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள், மழைநீா் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளா்கள், பள்ளிகள் மற்றும் வாா்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளா்கள் உள்பட மொத்தம் 9,454 போ் பயன்பெறுவாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மொடக்குறிச்சியில் கருணாநிதி சிலை: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் திறப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

விக்கிரவாண்டியில் சமுதாயக் கூடம் திறப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


