பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருள்கள் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி -ஆனைமலை இடையே அம்பராம்பாளையம் பகுதியில் ஆனைமலை போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தபோது வெடிமருந்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 178 ஜெலட்டின் குச்சிகள், 100 எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சிவா (40), கோவை, செட்டிபாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் (39) என்பதும், மீனாட்சிபுரம் அருகே விவசாய நிலத்தை சமன் செய்வதற்காக அங்குள்ள பாறைகளை வெடிவைத்து அகற்ற வெடிபொருள்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்

சாராயம் கடத்திய இருவா் கைது

பசுவந்தனை அருகே வெடிபொருள்கள் பறிமுதல்

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கியவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

