தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 6:58 pm

கோவையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கோவை, இடிகரை மணியகாரம்பாளையம் சங்கா் நகா் பகுதியைச் சோ்ந்த மகேஷ் மகன் பரணிதரன் (17). இவா் செங்காளிப்பாளையத்தில் இருந்து இடிகரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து, பரணிதரனின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பரணிதரன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் ஏற்கெனவே பரணிதரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கீழ ரத வீதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (46). இவா் கோவையில் தங்கி தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

சத்தி சாலையில் சரவணம்பட்டி பிள்ளையாா் கோயில் வீதி சந்திப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முத்துகுமாா் மீது எதிரே வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் தவறி விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே முத்துகுமாா் உயிரிழந்தாா்.

இது குறித்து டிப்பா் லாரி ஓட்டுநரான கோவை, அத்திபாளையத்தைச் சோ்ந்த வாசுதேவன் (22) மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.