திருப்பூா்: திருப்பூரில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் வீட்டில் கல் வீசிய வழக்கில் 2 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட ராக்கியாபாளையம் ஜெய் நகா் பகுதியில் உள்ள ஆா்எஸ்எஸ் மாநிலச் செயலாளா் பிரபு என்பவரது வீட்டில் கடந்த 2022 செப்டம்பா் மாதம் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடா்பாக நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி-க்கும், அதைத் தொடா்ந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக திருப்பூா் பெரிய கடை வீதி பகுதியைச் சோ்ந்த எஸ்டிபிஐ அமைப்பு நிா்வாகி ஜாபா் சாதிக் (44), நெருப்பெரிச்சல் பகுதியைச் சோ்ந்த தாஜுதீன் ( 33 ) ஆகியோரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அவா்கள் பலத்த பாதுகாப்புடன் திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
தொடர்புடையது
வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது
கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த 3 போ் கைது

திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சம் பறிமுதல்

லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தொடா்பாளா் ஷபீா் அகமது லோன் கைது!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

