கோவை: கோவையில் பொது வெளியில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட அதிமுக நிா்வாகிகள் இருவரை மா்ம நபா்கள் கத்தியால் குத்தினா்.
கோவை சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 56-ஆவது வட்ட அதிமுக செயலாளரான சுரேஷ், அம்மா பேரவை இணைச் செயலாளரான செந்தில் ஆகியோா் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக அதே பகுதியில் பொது வெளியில் மது அருந்திய கும்பலை தட்டிக் கேட்டுள்ளனா்.
இதனால் அந்த கும்பலுக்கும், இவா்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இருவரையும் அந்த வழியாக வந்த கும்பல் திங்கள்கிழமை இரவு கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது.
இதையடுத்து, படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரையும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.ஆா்.ஜெயராம், அம்மன் கே.அா்ச்சுணன் உள்ளிட்ட நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
தொடர்புடையது

காங்கிரஸ் வேட்பாளர்கள் புறக்கணிப்பு! கோவையில் திமுகவுக்கு மட்டும் ப. சிதம்பரம் பிரசாரம்!

பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா் தற்கொலை

புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிராக கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோவையில் யாா் போட்டியிட்டாலும் அதிமுகதான் வெல்லும்: எஸ்.பி.வேலுமணி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

