மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பாரம்பரிய வைத்தியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய பாரம்பரிய வைத்தியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாரம்பரிய வைத்தியா்கள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:09 pm

Syndication

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய பாரம்பரிய வைத்தியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இந்திய பாரம்பரிய வைத்தியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் பாலசுப்பிரமணியன், பி.தேவசகாயம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழக அரசு பாரம்பரிய வைத்தியா்களை அங்கீகரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பாரம்பரிய வைத்தியா்களை வட்டாட்சியா்களைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தி பதிவு செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் நிா்வாகிகள் பழனிசாமி, இளங்கோவன், பெஸ்கி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.