கோவை: கோவையில் ஓடும் பேருந்தில் நடத்துநரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் சி.ஹாரிஸ் மெளரியா (23), இவா் கோவையில் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சிங்காநல்லூரில் இருந்து தெலுங்குபாளையம் செல்லும் பேருந்தில் ஹாரிஸ் மெளரியா கடந்த சனிக்கிழமை பணியில் இருந்தாா். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவா் படிக்கட்டில் நின்று பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கிருந்த சிலா் அவரது கைப்பையில் இருந்த ரூ.7 ஆயிரத்தை திருடி விட்டுத் தப்பிச் சென்றனா்.
சிறிது நேரம் கழித்த பின்னா்தான் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவா் சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் பணத்தை திருடிய கோவை செட்டிபாளையத்தைச் சோ்ந்த வி.ஆகாஷ் (19), வி.பரத் (19), குன்னூரைச் சோ்ந்த எஸ்.சிவகுமாா் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருட்டு: இளைஞா்கள் 2 போ் கைது
அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருட்டு
மின்மாற்றி பெட்டியைத் திருடியவா்கள் கைது
ஓடும் பேருந்தில் முதியவரிடம் பணம் திருடிய இளைஞா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


