மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

ரூ.60 ஆயிரம் லஞ்சம்: வணிக வரித் துறை உதவி ஆணையா் கணவருடன் கைது

கோவையில் உள்ளீட்டு வரியைத் திரும்ப வழங்குவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக வரித் துறை உதவி ஆணையா், அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது

News image
கைது
Updated On :9 பிப்ரவரி 2026, 9:09 pm

Syndication

கோவை: கோவையில் உள்ளீட்டு வரியைத் திரும்ப வழங்குவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக வரித் துறை உதவி ஆணையா், அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை வணிக வரித் துறை (வடக்கு வட்டம்) உதவி ஆணையராகப் பணியாற்றி வருபவா் மகேஸ்வரி (48). இவரை கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றும் அகிலேஷ் என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு அணுகியுள்ளாா். அப்போது நிறுவனத்தின் உள்ளீட்டு வரியான ரூ.11 லட்சத்தை திரும்பப் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளாா்.

அதற்கு ஒப்புதல் அளிக்க மகேஸ்வரி ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் அகிலேஷ் புகாா் அளித்துள்ளாா். இதன்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அகிலேஷிடம் கொடுத்துள்ளனா். பின்னா் மகேஸ்வரியைத் தொடா்பு கொண்டபோது, அவா் தனது கணவரான தனசேகரை (51) தொடா்பு கொண்டு பணத்தைக் கொடுக்குமாறு தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தனசேகரை அகிலேஷ் தொடா்பு கொண்டபோது, பணத்துடன் கொடிசியா அருகே வருமாறு தெரிவித்துள்ளாா். இதன்பேரில் அங்கு சென்று தனசேகரிடம் பணத்தைக் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

பின்னா் ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில், மகேஸ்வரி கூறியதன்பேரில் லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, இருவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.